For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுடன் கூட்டணி இல்லை: காங். அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலின்போது அதிமுவுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் மேலிடம்திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா டெல்லி சென்றபோது பிரதமர் மன்மோகன் சிங்கை புகழ்ந்து பேசியதோடு,எதிர்காலத்தில் கூட்டணி மாற்றம் வரலாம் என்று கூறினார். இதையடுத்து சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ்கட்சியுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா முயல்வதாகக் கூறப்பட்டது.

இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் மேலிடம் பதிலளித்துள்ளது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளாரானகிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் பலிக்காது. காங்கிரஸ்கட்சி தலைவர் சோனியா காந்தியை அவர் கடுமையாக விமர்சித்ததை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. அதைஅரசியல் ரீதியான விமர்சனம் என்று ஜெயலலிதா கூறுவதை நாங்கள் ஏற்க முடியாது.

மேலும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி ஊழல் ஆட்சி. அவர் மீதே பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன.அவரது ஊழல் ஆட்சிக்கு எதிராகத் தான் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர். மேலும்ஜெயலலிதா ஒரு மதவாதி. அவருடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.

தமிழத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலை திமுக கூட்டணியில் இருந்தபடியே சந்திப்போம். அதில் எந்தமாற்றமும் இல்லை. அந்தத் தேர்தலிலும் எங்கள் அணிதான் வெற்றி பெறும். மக்கள் அலை ஜெயலலிதாவுக்குஎதிராக வீசுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். மாவட்டவாரியாக கூட்டங்களை நடத்தி, கட்சியை வலுப்படுத்துவோம். கட்சிக்கு விரோதமாகவும், கட்சி விதிகளை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X