ஜெயலட்சுமி வழக்கு: உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalakshmiசிவகாசி ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மட்டுமே விட வேண்டும்.இல்லாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றுமிரட்டல் வந்ததால் உயர்நீதிமன்றத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

சிவகாசி ஜெயலட்சுமியின் வழக்கை சிபிஐ விசாரணைக்கு விடுவதா அல்லது தமிழகபோலீஸாரின் விசாரணைக்கு விடுவதா என்பது குறித்து இன்று சென்னைஉயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.

தென் மண்டல காவல்துறை தலைவர் ஐ.ஜி.ராஜேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவைநீதிபதிகள் மாசிலாமணி, சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைநடத்தவுள்ளது. இந்த பெஞ்ச்தான் ஜெயலட்சுமி வழக்கை சிபிஐக்கு விட வேண்டும்என்று சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தீர்ப்பளித்தது.

ஜெயலட்சுமி வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நேற்றே ஜெயலட்சுமிமதுரையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு விட்டார். இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றபதிவாளருக்கு ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதத்தில், ஜெயலட்சுமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மட்டுமே விடவேண்டும், தமிழக காவல்துறையிடம் வழக்கை ஒப்படைக்கக் கூடாது. மீறிஒப்படைத்தால் உயர்நீதிமன்றம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்றுகூறப்பட்டிருந்தது.

இதையடுத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தார் உயர்நீதிமன்றத்தில் தீவிர சோதனைநடத்தினர். அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+