எனக்கு தனிப்பட்ட இழப்பு: கலாம்
டெல்லி:
டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு தனக்கு தனிப்பட்ட வகையில் நேர்ந்த மிகப் பெரிய இழப்பு என ஜனாதிபதிஅப்துல் கலாம் கூறியுள்ளார்.
அணு ஆராய்ச்சியில் டாக்டர் ராஜா ராமண்ணாவுடன் இணைந்து பணியாற்றிய ஜனாதிபதி அப்துல் கலாம்நேற்றிரவு மும்பை வந்தார். மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்த ராமண்ணாவைப்பார்த்துவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு டெல்லி திரும்பினார்.
இந் நிலையில் இன்று அதிகாலையில் ராமண்ணா உயிரிழந்தார். இது தொடர்பாக கலாம் இரங்கல் செய்தியில்,
டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு எனக்கு தனிப்பட்ட வகையில் நேர்ந்த மிகப் பெரிய இழப்பு. எனக்குநண்பராக குருவாக இருந்து வழிகாட்டியவர். அவுரங்காபாத்தில் இருந்த எனக்கு ராமண்ணாவின் உடல் நிலைமிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து மும்பை சென்று அவருக்கு எனது மரியாதையைசெலுத்திவிட்டுத் திரும்பினேன்.
அந்த மாபெரும் மனிதர் உயிரோடு இருந்தபோதே, கடைசியாக அவரைப் பார்க்க வாய்ப்பு கொடுத்தஇறைவனுக்கு நன்றி.
அவரது மறைவால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை அவ்வளவு சீக்கிரமாக நிரப்பிவிட முடியாது என்று கூறியுள்ளார்.