For Quick Alerts
For Daily Alerts
Just In
கருணாவின் அண்ணன் புலிகளால் சுட்டுக் கொலை
கொழும்பு:
கருணாவின் அண்ணன் விநாயகமூர்த்தி சிவனேசதுரை என்ற ரெக்கியை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
மட்டக்களப்புக்குள் ஆயுதம் தாங்கிய கும்பலுடன் புகுந்த ரெக்கி மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ரெக்கியும்அவரது இரு மெய்க்காப்பாளர்களான எழிலன், துமிலன் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே ஈபிடிபியைச் சேர்ந்த சோமசுந்தரம் வர்ணகுலசிங்கம் என்பவரை கொழும்பில் விடுதலைப் புலிகள்சுட்டுக் கொன்றுள்ளனர். 39 வயதான சிங்கம், தனது வீட்டுக்கு அருகே காரை நிறுத்திவிட்டு இறங்கும்போதுசுடப்பட்டார்.
இத் தாக்குதலில் அவரது மனைவியும் காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை இப்போது புலிகளின் புதிய கமாண்டரான கலோனல் பானுகண்காணித்து வருகிறார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த ரமேஷ் மாற்றப்பட்டுவிட்டார்.
Comments
Story first published: Friday, September 24, 2004, 5:30 [IST]