For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு விஞ்ஞானிகள் அதிர்ச்சி, இரங்கல்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

ராமண்ணாவின் மறைவுக்கு மூத்த அணு விஞ்ஞானிகள் பலரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

போக்ரானில் டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் இந்தியா இரண்டாவதாக நடத்திய அணு குண்டு சோதனையில்முக்கிய பங்காற்றிய இந்திய அணு ஆராய்ச்சிக் கமிஷனின் தலைவரான டாக்டர் அனில் ககோத்கர் கூறுகையில்,

இந்திய அணு ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து வழிகாட்டி வந்தவர் ராமண்ணா.அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பாகும்.

உள்நாட்டிலேயே அணு உலையை டிசைன் செய்வது, கட்டுவது என பல ஆராய்ச்சிகளையும் சாதனைகளையும்புரிந்தவர் என்றார்.

இந்தியாவின் இரண்டாவது அணு குண்டு சோதனையில் முக்கிய பங்கு வகித்த இன்னொரு விஞ்ஞானியான மத்தியஅரசின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் சிதம்பரம் கூறுகையில்,

இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் ஹோமி பாபாவுடன் பணியாற்றியவர் ராமண்ணா. அணுஆராய்ச்சியில் மிகச் சிறந்த மூளையை இந்தியா இழந்துவிட்டது. விஞ்ஞானியாக மட்டுமல்லாமல்,விஞ்ஞானிகளை உருவாக்குவதிலும் வல்லவர் அவர் என்றார்.

அணு சக்தித் துறையின் முன்னாள் தலைவரான டாக்டர் பி.கே. ஐயங்கார் கூறுகையில்,

அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராமண்ணா அதற்காக பெங்களூரில் உயர்கல்விக்கான தேசிய கழகத்தைத் துவக்கினார். மிகச் சிறந்த நாட்டுப் பற்றாளர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X