சங்கராச்சாரியாருடன் இனி பேச மாட்டோம்: முஸ்லிம்கள்
கோழிக்கோடு:
அயோத்தி பிரச்சினை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியாருடன் இனி பேச மாட்டோம் என்று அகில இந்தியமுஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் முகமது அப்துல் ரஹீம் குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:
சங்கராச்சாரியாருடன் எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவ்விதஅக்கறையையும் அவர் காட்டவில்லை. இனி அவருடன் வாரியம் பேசாது.
கடந்த 2002ம் ஆண்டில் வாரியத்துடன் பேச சங்கராச்சாரியார் முன்வந்தார். அப்போது அவரது கருத்துகளைஎழுத்துப்பூர்வமாகத் தருமாறு நாங்கள் கேட்டோம். ஆனால் அவர் தரவில்லை.
அடுத்த ஆண்டில் மற்றொரு சுற்று பேச்சு நடத்த விரும்பிய சங்கராச்சாரியார், எழுத்துப்பூர்வமாகஆலோனைகளைத் தர ஒப்புக் கொண்டார். ஆனால் பின்னர் தனது ஆலோசனைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியை கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்க வேண்டும் என்றும்கூறினார்.
வேறு யாருடனும் வரலாற்று உண்மைகள், தொல்பொருள் தடயங்கள் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்ததயார் என்றார்.












Click it and Unblock the Notifications