முகமது அலி ஜாமீனில் விடுதலை
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிபிசிஐடி முன்னாள் டி.ஐ.ஜி. முகமது அலி, உதவிபோலீஸ் கமிஷனர் சங்கர், மதுரை எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகியோருக்கு சென்னை எழும்பூர் கூடுதல்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
போலி முத்திரைத் தாள் வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்கள் ஆகிறது. இவர்களது ஜாமீன்மனுக்கள் பலமுறை, பல நீதிமன்றங்களால் தளளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில் இவர்கள் மீண்டும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் மீது இன்று சென்னை எழும்பூர் கூடுதல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி அருள்ராஜ் இவற்றை விசாரித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,
கைது செய்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இவர்கள் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனவேஇவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல், இந்த வழக்கில் தமிழக அரசு எங்களுக்கு போதியஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள்ராஜ்,
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி அருள்ராஜ், கைது செய்யப்பட்டு 90 நாட்களை இவர்கள் சிறையில் கழித்துவிட்டதாலும் அவர்கள் மீது இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், மூவரையும் ஜாமீனில்விடுதலை செய்வதாக அறிவித்தார்.
அப்போது சிபிஐ வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல் குறுக்கிட்டு, 3 பேர் மீதும் லஞ்சப் புகார் இருப்பதால் அவர்களைபெங்களூரில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருக்குமாறுநிபந்தனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்து பரிசீலித்து மாலையில் முடிவை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கியின் தலைமையகமாக விளங்கியது பெங்களூர் தான்என்பது குறிப்பிடத்தக்கது.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications