முகமது அலி ஜாமீனில் விடுதலை
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிபிசிஐடி முன்னாள் டி.ஐ.ஜி. முகமது அலி, உதவிபோலீஸ் கமிஷனர் சங்கர், மதுரை எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகியோருக்கு சென்னை எழும்பூர் கூடுதல்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
போலி முத்திரைத் தாள் வழக்கில் மூவரும் கைது செய்யப்பட்டு இன்றுடன் 90 நாட்கள் ஆகிறது. இவர்களது ஜாமீன்மனுக்கள் பலமுறை, பல நீதிமன்றங்களால் தளளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இந் நிலையில் இவர்கள் மீண்டும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் மீது இன்று சென்னை எழும்பூர் கூடுதல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி அருள்ராஜ் இவற்றை விசாரித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,
கைது செய்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இவர்கள் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனவேஇவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல், இந்த வழக்கில் தமிழக அரசு எங்களுக்கு போதியஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருள்ராஜ்,
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி அருள்ராஜ், கைது செய்யப்பட்டு 90 நாட்களை இவர்கள் சிறையில் கழித்துவிட்டதாலும் அவர்கள் மீது இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததாலும், மூவரையும் ஜாமீனில்விடுதலை செய்வதாக அறிவித்தார்.
அப்போது சிபிஐ வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல் குறுக்கிட்டு, 3 பேர் மீதும் லஞ்சப் புகார் இருப்பதால் அவர்களைபெங்களூரில் வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே 3 பேரையும் பெங்களூரில் தங்கியிருக்குமாறுநிபந்தனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்து பரிசீலித்து மாலையில் முடிவை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கியின் தலைமையகமாக விளங்கியது பெங்களூர் தான்என்பது குறிப்பிடத்தக்கது.
-
குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.. இந்த 3 வேலைகளை முடிக்க ஒரே நாள்தான் இருக்கு! தமிழக அரசு அதிரடி -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்!












Click it and Unblock the Notifications