ஜெயலட்சுமி: நீதிபதிகளுக்கு மீண்டும் குண்டு மிரட்டல்
சென்னை:
ஜெயலட்சுமி வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுதொடர்பாக வந்துள்ள மொட்டை கடிதம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கூடாது என்ற போலீசாரின் மேல் முறையீட்டு மனு மீதுநீதிபதிகள் பாலசுப்பிரமணியம், மாசிலாமணி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட்டதும் இந்த நீதிபதிகள் தான்.
இதை எதிர்த்து போலீசார் தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பை நீதிபதிகள் தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
ஜெயலட்சுமி விவகாரத்தில் ஏற்கனவே இந்த நீதிபதிகளுக்கு ஒருமுறை வெடிகுண்டு வீசுவோம் என்ற மிரட்டல்கடிதம் வந்தது. இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது, மீறினால் வெடிகுண்டு வீசுவோம் என்றுமிரட்டி இரண்டாவது முறையாக மொட்டைக் கடிதம் வந்துள்ளது.
போலீசாருக்கு ஆதரவாக இந்த மொட்டை கடிதம் வந்துள்ளதால், இதில் தொடர்புடைய காக்கிச் சட்டைகள் மீதேசந்தேகப் பார்வைகள் விழுகின்றன.












Click it and Unblock the Notifications