For Daily Alerts
Just In
பெண்ணை கொன்று 30 பவுன் நகை கொள்ளை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியரின் மனைவியைக் கொலை செய்து 30 பவுன் நகைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஓய்வு பெற்ற பேராசிரியரான.அப்புராஜ், காஞ்சிபுரத்தில் தனது மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார்.
இன்று அதிகாலை அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல் சாந்தியை கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.பின்னர் அவர் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டுதப்பியோடிவிட்டது.
போலீஸார் விரைந்து வந்து நடத்திய விசாரணையில், அப்புராஜின் வீட்டின் கீழ் பகுதியில் வாடகைக்கு வசித்துவந்த வாலிபர்தான் இந்த கொலை மற்றும் கொள்ளைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.
தலைமறைவாகிவிட்ட அந்த வாலிபரையும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
Comments
Story first published: Thursday, September 30, 2004, 5:30 [IST]