பிள்ளையார் பட்டியும்.. வட்டியும் வெளியாகுமா?
சென்னை:
பாண்டியராஜன் நடித்துள்ள பிள்ளையார் பட்டியும் கந்துவட்டியும் படம், நரகரத்தார் சமூகத்தினரைஇழிவுப்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் படத்தை நாளைநீதிபதி பார்க்கிறார்.
நடிகர் பாண்டியராஜன் நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் படம் பிள்ளையார் பட்டியும் கந்துவட்டியும். இந்தபடத்தின் பெயரும், படத்தின் சில காட்சிகளும் நகரத்தார் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி,சக்தி செட்டியார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். படத்திற்கு தடை விதிக்க வேண்டும்என்றும் கோரியிருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதி அசோக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. படத் தயாரிப்பாளர் சார்பில்ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேசன். படத்தின் தலைப்பும், காட்சிகளும் எந்த ஒரு சமூகத்தினரையும் புண்படுத்தும்விதத்தில் அமைக்கப்படவில்லை; எனவே படத்திற்கு தடை விதிக்காமல் இவ் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்என்று வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார் படத்தை பார்க்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார். இதனையடுத்து நீதிபதிஅசோக்குமார் நாளை மாலை 7மணிக்கு கோடம்பாக்கம் எம்எம் மினி தியேட்டரில் படம் பார்க்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
நியூ, அரசாட்சி படங்ளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அந்தப்படங்களைப் பார்த்துவிட்டு தீர்ப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.