பரணீதரன் to
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதலின்படி, சேலம் குட்டிச் சாமியாரான பரணீதரன் தனது பெயரை ஸ்ரீவித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று மாற்றி அமைத்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்தைக் கலக்கி வரும் இந்த பரபரப்பு சாமியார் முதலில் மதுரை ஆதினத்துடன் நெருக்கமானார். பின்னர்அவரிடம் இருந்து விலகி இப்போது காஞ்சி மடத்துடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந் நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மட இல்லத்தில் சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதிஸ்வாமிகளை சந்தித்த அவர், தனது பெயரை ஸ்ரீ வித்யாசங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
காஞ்சி மகா பெரியவர் மற்றும் இப்போதைய சங்கராச்சாரியார் ஆகியோரின் பெயர்கள் வரும் வகையில் தனதுபுதிய பெயரை சூட்டிக் கொண்டுள்ளார் பரணீதரன்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன் என்றும் அதே நேரத்தில், சங்கர மடத்தில் சேரமாட்டேன் என்றும் பரணீதரன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications