ரூ. 10 லட்சம் திருட்டு விசிடிக்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள திருட்டு விசிடிக்கள் மற்றும் டிவிடிக்களை போலீஸார் பறிமுதல் செய்துஒருவரைக் கைது செய்துள்ளனர்.
முத்தியால்பேட்டை பகுதியில் காதர் இப்ராகிம் என்பவரது கடையில் இன்று சென்னை போலீஸார் திடீர் சோதனைநடத்தி ஏராளமான திருட்டு விசிடிக்கள், டிவிடிக்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள10,000 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காதர் இப்ராகிம் மீது காபிரைட் மீறல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத் தகவலை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த காவல்துறை ஆணையர் நடராஜ், கைது செய்யப்பட்டுள்ளகாதர் இப்ராகிமுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வாங்கித் தருவோம் என்றார்.
முதல்வர் ஜெயலலிதாவை திரைப்படத் துறையினர் சந்தித்து திருட்டு விசிடி குறித்து புகார் தெரிவித்த பின்னர்சென்னை போலீஸார் மேற்கொண்ட முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.