வறட்சி: ரூ. 228.53 கோடி கூடுதலாக கோரும் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வறட்சி நிலை குறித்து ஆய்வு நடத்திய மத்தியக் குழுவிடம் கூடுதலாக ரூ. 228.53 கோடி நிதியுதவிஅளிக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக ஆய்வு நடத்திய மத்தியக் குழுவினர் நேற்றிரவு தலைமைச் செயலகத்தில் உயர்அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது வறட்சி நிலையை சமாளிக்க ஏற்கனவே கோரப்பட்ட ரூ. 1,680 கோடி நிதியுதவியோடு மேலும் ரூ.228.53 கோடியை அளிக்குமாறு தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இதன்மூலம் தமிழக அரசு மொத்தம் ரூ. 1,909 கோடி மத்திய நிதியுதவியைக் கோரியுள்ளது. இதில் குறுவைசாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ 132.84 கோடியையும், சென்னையில் குடிநீர்வழங்க ரூ. 37.07 கோடியையும் ஒதுக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வறட்சியால் பட்டுப் போன பனை மரத் தொழிலாளர்களுக்கு உதவ ரூ. 58.62 தேவைப்படுவதாகவும் தமிழக அரசுகூறியுள்ளது.

தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனைகளை முடித்துக் கொண்டு மத்திய வறட்சி நிவாரணக் குழுவினர் 8 பேரும்நேற்றிரவே டெல்லி திரும்பி விட்டனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்குத்தேவையான நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+