சென்னை காவல் நிலையத்தில் கைதி மர்ம சாவு
சென்னை:
சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் செல்போன் திருட்டு தொடர்பாக பிடித்து வைக்கப்பட்டிருந்தஇளைஞர் லாக்கப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமரன் என்ற வாலிபரை சாஸ்திரி நகர் போலீஸார்,செல்போன் திருட்டு வழக்கில் கைது செய்து காவல் நிலைய லாக்கப்பில் அடைத்திருந்தனர்.
இன்று காலை செந்தில்குமரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரதுஉடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் குறித்து துணை ஆணையர் சாஸ்திரி கூறுகையில், செந்தில்குமரன் தான் அணிந்திருந்த ஜட்டியின்நாடாவால் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றார்.
செந்தில்குமரன் அடித்துக் கொலை செய்யப்பட்டு விட்டதாக கூறி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் காவல்நிலையம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications