நோபல் பரிசுக்கு வாஜ்பாய் பெயர் பரிந்துரை?
ஸ்டாக்ஹோம்:
உலக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் சிபாரிசுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் 2004ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற ஆஸ்திரிய பெண் எழுத்தாளரும்,கவிஞருமான எல்பிரெடி ஜெலினக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக சமாதானத்துக்கான விருது பெறுவதற்காக சிபாரிசுப் பட்டியலில் 142 தனிப்பட்ட நபர்களிளின் பெயர்களும்,50 நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
தனிநபர் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரும் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல்அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்,பிரான்ஸ் அதிபர் ஜேக் சிராக், போப் ஆண்டவர் 2ம் ஜான்பால் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது.
நோபல் பரிசு கமிட்டி இந்த பெயர் பட்டியலை பரிசீலித்து பரிசுக்குரியவரை நாளை அறிவிக்கும்.இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த வாஜ்பாயும் முஷாரபும் முயற்சிகள் மேற்கொண்டதற்காகஅவர்களது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இலக்கியதுக்கான நோபல்:
இந் நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஆஸ்திரிய எழுத்தாளரும், கவிஞருமான எல்பிரெடிஜெலினக்குக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை நோபல் கமிட்டி இன்று அறிவித்தது.
பியானோ டீச்சர் என்ற திரைப்படத்துக்கு இவர் எழுதிய கதை இலக்கிய உலகத்தை இவர் பக்கமாகத் திரும்பியது.தனது எழுத்துக்களில் உலக அமைதியை வலியுறித்தி வருபவர்.












Click it and Unblock the Notifications