முத்திரைதாள் மோசடி: மாஜி அமைச்சருக்கு தொடர்பு?
சென்னை:
போலி முத்திரைத்தாள் வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமிக்குத் தொடர்பு இருப்பதாகசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.30,000 கோடி போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பியான மாயத் தேவர் உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்துள்ள மனு விவரம்:
திண்டுக்கல் பெரியசாமி கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது பெரியசாமியும், அவரது பினாமிகளும் போலி முத்திரைத் தாள்களை விற்றதன் மூலம் ரூ. 250 கோடிஅளவுக்கு சொத்துக்களைக் குவித்துள்ளனர்.
பெரியசாமிக்கு நெருக்கமான திண்டுக்கல் மாவட்டப் பத்திரப் பதிவாளர் அன்பழகன், அமைச்சரின் ஏஜென்டாகசெயல்பட்டு சட்ட விரோதமாக 300 ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்துள்ளார். இதற்கான பணம் போலி முத்திரைத்தாள் விற்றதன் மூலம் வந்தது.
மேலும், 1997ம் ஆண்டு பெரியசாமி அமைச்சராக இருந்த காலத்தில், அவரது ஏஜென்டுகள் போலி முத்திரைத்தாள்களை வைத்திருந்ததற்காக திண்டுக்கல் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் பெரியசாமியின்தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
எனவே இது குறித்தும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதிசொக்கலிங்கம் நாளை விசாரிக்கவுள்ளார்.