45 சதவீத காங்கிரஸ் எம்.பிக்கள் கோடீஸ்வரர்கள் !
பெங்களூர்:
இப்போதைய காங்கிரஸ் எம்.பிக்களில் 45 சதவீதத்தினரிடம் ரூ. 1 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதுதெரியவந்துள்ளது. காங்கிரஸ் எம்.பிக்கள் அனைவரிடமும் சேர்த்து ரூ. 878 கோடி சொத்து உள்ளது. இதுஅவர்கள் வெளியில் தெரிவித்துள்ள சொத்து என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரைச் சேர்ந்த பொது விவகாரக் கமிட்டி என்ற சமூகநல அமைப்பைச் சேர்ந்த டாக்டர் சாமுயேல் பால்,பேராசிரியர் விவேகானந்தா ஆகியோர் நடத்தியுள்ள ஆய்வின் விவரம்:
மக்களவையில் இப்போதுள்ள 541 எம்.பிக்களில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களில் 50 சதவீதம்பேர் பிகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேதம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
காங்கிரஸ் எம்.பிக்களின் சொத்துக்கள் மொத்த எம்.பிக்களின் சொத்துக்களில் 52 சதவீதமாகும். கம்யூனிஸ்ட்கட்சிகளின் எம்.பிக்களில் ஒருவரும் கோடீஸ்வரர் இல்லை. அவர்களது சொத்துக்கள் ரூ. 10 லட்சத்தைத்தாண்டவில்லை.
10 காங்கிரஸ் எம்.பிக்களில் ஒருவருக்கு ரூ. 10 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.
மொத்தமுள்ள 541 எம்.பிக்களில் 132 பேர் பள்ளி இறுதி வகுப்பைக் கூட தாண்டாதவர்கள். ஆனால், இவர்களதுசொத்துக்கள் படித்த எம்.பிக்களை விட அதிகம்.
மொத்த எம்.பிக்களில் 13.6 சதவீதம் பேர் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாதவர்கள். இந்தக்கடனின் மதிப்பு ரூ. 41.3 கோடி என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.