ஒரு ஜாதிக்கு இட ஒதுக்கீடு: அரசுக்கு கண்டனம்
சென்னை:
ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு குறிப்பிட்ட ஒரு சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடுசெய்யப்பட்டிருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த கவியரசி என்ற மாணவி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில், ஆசிரியர் பயற்சி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு பிரமலைக் கள்ளர் சமூகத்தினருக்கென்று தனி இடஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சரியல்ல, இந்த உத்தரவை ரத்து செய்துமுறைப்படி எனக்கும் ஒரு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், கவியரசிக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஒரு இடம் ஒதுக்கஉத்தரவிட்டார்.
மேலும் பிரமலைக் கள்ளர் சமூகத்திற்கு மட்டும் பிரத்யேக இட ஒதுக்கீடு செய்ததற்கு அரசுக்கு கண்டனம்தெரிவித்தார். இது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications