For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக அமைதி: நோபல் பரிசு வென்ற ஆப்பிரிக்க பெண்

By Staff
Google Oneindia Tamil News

நைரோபி:

கென்ய நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலரும் அமைச்சருமான வாங்கரி மாதாய்க்கு 2004ம் ஆண்டுக்கான உலகஅமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

64 வயதான மாதாய் தான் நோபல் பரிசை வெல்லும் முதல் ஆப்பிரிக்க பெண்ணாவார்.

கென்யாவின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை துணை அமைச்சராக உள்ள மாதாய், தனது நாட்டின்வறண்ட பகுதிகளிலும் மரங்களை நட்டு அவற்றை பசுமை பூமியாக மாற்றிக் கொண்டிருப்பவர். கிரீன் பெல்ட்இயக்கம் என்ற பெயரில் 1977ம் ஆண்டில் இவர் தொடங்கிய மரம் நடும் திட்டம் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய இயற்கை வளத் திட்டமாகும்.

இதனால் கென்யாவின் பல வறண்ட பகுதிகள் பசுமையாயின. கென்யாவில் சுமார் 3 கோடி மரங்களை நட்டுள்ளமாத்தாயின் இயக்கம், ஆயிரக்கணக்கான மரக் கன்றுகள் விற்கும் நர்சரிகளையும் நடத்தி வருகிறது. இதனால்பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாயின. இத் திட்டத்தின் பலன்கள் குறிப்பாகபெண்களைப் போய் சேரும் வகையில் செயல்பட்டார் மாத்தாய்.

உயிரியலில் டாக்டர் பட்டம் பெற்ற மாத்தாய், பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி அமைச்சரானவர்.தீவிரமான மனித உரிமை ஆர்வலர்.

இந்த விருதுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட 140க்கும் அதிகமானவர்களின் பெயர்கள்பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X