கூலிப்படை வைத்து வியாபாரியை கடத்திய பெண்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த வியாபாரி கூலிப் படை வைத்துக் கடத்தினார் ஒரு பெண்.
அந்தப் பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர். அவரால் கடத்தப்பட்ட தொழிலதிபர் பத்திரமாகமீட்கப்பட்டுள்ளார். மேலும் கூலிப் படையைச் சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த வியாபாரி எத்திராஜ். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மோகனா என்றகந்துவட்டிப் பெண்ணிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
இந்தக் கடன் தொகையை அவர் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வந்தார். இந் நிலையில், 3 நாட்களுக்கு முன்மோகனா அவரை கூலிப் படையை வைத்துக் கடத்தினார். இது தொடர்பாக எத்திராஜின் குடும்பத்தினர் போலீஸில்புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து எத்திராஜை கடத்திச் சென்ற கும்பலைத் தேடி வந்தனர். தேடுதல்வேட்டையின்போது பட்டாக் கத்திகளுடன் இந்தக் கூலிப் படையினர் ஓட்டேரி ஏரிக்கரை பகுதியில்பதுங்கியிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அப் பகுதியை துப்பாக்கிகளுடன் சுற்றி வளைத்து எத்திராஜை மீட்டனர். கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்திய கார், செல்போன், பட்டாக்கத்திகள் ஆகிவயற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
கூலிப்படையை ஏவிய மோகனா தலைமறைவாகி விட்டார். அவருக்குப் போலீஸார் வலை வீசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications