தூத்துக்குடி திமுக செயலாளரின் சொத்துகள் முடக்கம்
தூத்துக்குடி:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமியின்சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புப்போலீஸார் பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கில் பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குற்றப் பத்திரிக்கை நகல்களும் வழங்கப்பட்டுவிட்டன.இந் நிலையில் வழக்கு முடியும் வரை பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரது சொத்துகளை முடக்கி வைக்கவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் நட்டர்ஜி நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல்செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோபால், பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.2.36 கோடிமதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை வரும் 26-ம் தேதி வரை விற்கவோ, உரிமம் மாற்றவோ,அழிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு காரணமாக பெரியசாமியின் 12 வாகனங்கள் உள்பட 32 சொத்துகள் முடக்கப்பட்டன.