விடுதலையான 15 மீனவர்கள் மண்டபம் வந்தனர்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கைக் கடற்படையால் கடந்த 4-ம் தேதி கடத்திச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் மண்டபம்வந்து சேர்ந்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சமீபத்தில் கடத்திச் சென்றனர். இவர்களில்15 பேர் விடுவிக்கப்பட்டனர். மற்ற 5 பேரும் இலங்கை மன்னார் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட 15 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடல் எல்லைக்கு அழைத்து வந்தனர்.15 பேரையும் இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் மீனவர்களை மண்டபத்துக்கு இந்தியக் கடலோரக் காவல் படையினர் அழைத்து வந்தனர்.
இந் நிலையில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 5 பேரையும் விடுவிக்கும்வரை வேலைநிறுத்தம்தொடரும் என்றும் ராமேஸ்வரம் மீனவர் சங்கப் பிரதிநிதி தேவதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications