கடலூர் ஜமுகூ கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
கடலூர்:
கடலூரில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை நடைபெறுவதாக இருந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பண்ருட்டி தொகுதி பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் உள்பட9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வேல்முருகனை கைது செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதைக் கண்டித்து நாளை கடலூர்மஞ்சகுப்பம் மைதானத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசெயலாளர் வரதராஜன், திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவதாகஇருந்தது.
இந் நிலையில் கூட்டம் நடத்த காவல்துறை மறுத்துள்ளது. இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர்பெரோஸ்கான் அப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
வெங்கடேசன் கொலை வழக்கில் வேல்முருகன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இக்கொலையில்தொடர்புள்ளவர்கள் தலைமறைவாக இருப்பதால் கடலூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் நிலைமைஉள்ளதாக புலனாய்வு துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் எனது உட்கோட்டத்தில் 5 பேருக்கு மேல் பொதுக்கூட்டம். ஊர்வலம் நடத்த கடந்த மாதம் 28ம் தேதி முதல்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ளோம் என்றுகூறினார்.












Click it and Unblock the Notifications