சென்னையில் மண் சரிந்து 3 பேர் சாவு
சென்னை:
சென்னையில் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் மண்ணில் புதைந்து பலியாயினர்.
சென்னைப் புறநகரான கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர்பகுதியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தசத்யநாராயணா என்பவரது வீட்டில் நீண்ட நாட்களாக கிணறு ஒன்று பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.அந்தக் கிணறை தூர்வாரும் பணியில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த சாம்பையா, அர்ஜூன்,கேசவன் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேரும் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் மீதுமண் மூடியது. உடனடியாக தீயணைக்கும் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களைக்காப்பாற்ற முடியவில்லை. இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் 3 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications