மேலும் தீவிரமாகும் ராமேஸ்வரம் மீனவர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களது போராட்டத்தைத் மேலும்தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் அடிக்கடி ராமேஸ்வரம் பகுதி மீனவர்களைப் பிடித்துச் செல்வதைக் கண்டித்துராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்விற்பனை, ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும், நாகப்பட்டனம்மீனவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை இயக்குனர் ஜீவரத்தினம் மற்றும் அதிகாரிகள் ராமேஸ்வரம் சென்றுமீனவர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனால் இதில் மீனவர்கள் சமாதானம் அடையவில்லை.

தங்கள் மீதான இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்களின் தாக்குதலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள்உடனடியாக தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கூறிவிட்டனர்.

இந் நிலையில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் தமிழக, புதுவை மீனவர் கூட்டமைப்பினர் முடிவுசெய்துள்ளனர். இது குறித்து விவாதிக்க இன்று மாலை ராமநாதபுரத்தில் தமிழக, புதுவை மீனவர்கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+