இந்திய விதவைகள்: உதவ செரி பிளேர் கோரிக்கை
லண்டன்:
இந்திய விதவை பெண்களின் குழந்தைகளின் கல்விச் செலவிற்கான உதவித் தொகையை உயர்த்த இங்கிலாந்தில்உள்ள லூம்பா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இந்த அறக்கட்டளை இந்தியாவில் 10 மாநிலங்களில் 1,100 குழந்தைகளுக்கு மாதம் ரூ. 500 வீதம் 5வருடங்களுக்கு கல்விக்கான உதவித் தொகை அளித்து வருகிறது.
இந் நிலையில் இந்த அறக்கட்டளைக்கு நிதி சேர்க்க லண்டனில் சிறப்பு இரவு விருந்து நடந்தது.
தீபாவளிக் கொண்டாட்டங்களின் ஒரு நடத்தப்பட்ட இந்த விருந்தில் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேரின்மனைவி செரி பிளேர் உட்பட 400 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிதியளித்தனர்.
நிகழ்ச்சியில் செரி பிளேர் பேசுகையில்,
இந்தியாவில் 33 மில்லியன் விதவைப் பெண்கள் உள்ளனர். 100 மில்லியன் குழந்தைகள் அவர்களைநம்பியுள்ளனர். அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் லூம்பா டிரஸ்ட் உறுப்பினர்கள் அதிக நிதிவழங்க வேண்டும். இந்தியாவின் 29 மாநிலங்களிலும் தலா 100 குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கஇந்த டிரஸ்ட் முடிவு செய்துள்ளது என்றார்.
அறக்கட்டளையின் தலைவர் ராஜ் லூம்பா பேசுகையில், பாலின வேறுபாடு, மதம், சாதி வேறுபாடுகள் இன்றி உதவிவழங்கப்படவேண்டும் என்பதே இந்த டிரஸ்ட்டின் நோக்கமாகும். நமது உதவி மூலம் ஒரு விதவைப் பெண்ணின்மாத வருமானம் ரூ.1,500க்கும் குறையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா, இந்தியத் தூதர் கமலேஷ் சர்மா, லண்டன்மேயர் கென் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications