For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர அரசு- நக்ஸல்கள் பேச்சு தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்:

நக்ஸலைட்களுக்கும் ஆந்திர அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.

மக்கள் யுத்தக் குழு நக்ஸலைட் அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக ஆந்திர அரசையும், நிலச் சுவன்தாரர்களையும்எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. இந் நிலையில் சந்திரபாபு நாயுடுவை அடுத்து ஆந்திரமுதல்வராகப் பொறுப்பேற்ற ராஜசேகர ரெட்டி, நக்ஸலைட்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

பேச்சுவார்த்தைக்கு நக்ஸலைட்களும் இணங்கினர். இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டன. தலைமறைவு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு ஹைதராபாத் வந்த நக்ஸலைட் தலைவர்கள்கடந்த 3 நாட்களாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் டாக்டர் எம்.சி.ஆர். எச். ஆர்.டி நிறுவனத்தில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு நக்ஸல்தலைவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாநில உள்துறை அமைச்சர் ஜன ரெட்டி தலைமையிலான 9 பேர்கொண்ட அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது.

பள்ளி ஆசிரியராக இருந்து மக்கள் போர்க்குழு செயலாளராக மாறிய ராமகிருஷ்ணா, ஆந்திரா- ஒரிசா பகுதிபோர்க்குழு செயலாளர் சுதாகர், வடக்கு தெலுங்கானா போர்க் குழு உறுப்பினர் கணேஷ், ஜனசக்தி தலைவர்கள்அமர் மற்றும் ரியாஸ் ஆகியோர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கரன் தலைமையில் மத்தியஸ்தர் குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நக்ஸல்- சிவபார்வதி சந்திப்பு:

முன்னதாக என்.டி.ஆர். தெலுங்கு தேச கட்சித் தலைவர் லட்சுமி சிவபார்வதி, ராமகிருஷ்ணாவை சந்தித்துப்பேசினார். அப்போது அவர், பேச்சுவார்த்தையின்போது சந்திரபாபு நாயுடுவின் சொத்துக் குவிப்பு பற்றியும்,அவரது ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றியும் விசாரணை நடத்த அரசை வற்புறுத்தும்படி கேட்டுக்கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X