ஜெயலலிதாவுக்காக யாகம் நடத்திய அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூவரசங்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் மகா சுதர்ஷண சண்டிஹோமம் நடந்தது.
இதில் அமைச்சர் வேலுச்சாமி கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் சங்கல்ப பூஜை செய்தார்.
இதற்காக நள்ளிரவில் அதிமுகவினர் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள்நடந்தன. அப்போது ஜெயலலிதாவின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
இதையடுத்து காலை 8 மணியளவில் ஜெயலலிதாவின் பெயரில் சங்கல்ப பூஜைகள் நடந்தன.
பூஜை முடித்து வெளியே வந்த அமைச்சரை படமெடுக்க முயன்ற நிருபர்களை அவரும் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் தடுக்கமுயன்றனர்.












Click it and Unblock the Notifications