நீதிபதியின் செல்போனை சுட்ட குரங்கு
திருச்சி:
திருச்சி மாவட்ட நீதிமன்றத்துக்குள் நுழைந்த குரங்கு நீதிபதியில் செல்போனையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு ஓடியது.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் குரங்குகளின் தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
இந் நிலையில் நீதிமன்ற அறைக்குள் நுழைந்த குரங்கு, துணை நீதிபதியின் செல்போனை எடுத்துக் கொண்டு மரத்தில் தாவிவிட்டது.அதனிடம் இருந்து செல்போனைப் பறிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இந் நிலையில் புத்திசாலி வழக்கறிஞர் ஒருவர் தனது செல்போனில் இருந்து, குரங்கு கையில் இருந்த செல்போனுக்கு டயல் செய்தார். அந்தபோன் வைப்ரேட்டர் மோடில் வைக்கப்பட்டிருந்ததால், செல்போன் வைப்ரேட் ஆனது.
கையில் இருக்கும் போன் திடீரேன அதிர்வதைக் கண்டு பயந்து போன குரங்கு அதை கீழே வீசியது. இதை பத்திரமாக கேட்ச் செய்தார்நீதிமன்ற ஊழியர் ஒருவர். செல்போனை கீழே போட்டாலும் பேனாவை அது விடவில்லை. பத்திரமாக எடுத்துச் சென்றுவிட்டது.