அரவிந்தர் ஆசிரம விவகாரம்: 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை இழைக்கப்படுவதாக எழுந்த புகார்தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கதார்பிரதாப் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியுள்ளார். இவரது மகள்கள்அருணாஸ்ரீ, நிவேதாஸ்ரீ, ஜெயஸ்ரீ, ராஜஸ்ரீ, ஹேமலதாஸ்ரீ ஆகியோர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடிகுடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாகவும், தங்கள் அறைகளில் ஆபாச படங்கள்வீசப்படுவதாகவும் தேசிய மகளிர் ஆணையத்திடமும், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்திலும் புகார்கொடுத்தனர்.

இதனையடுத்து முத்தியால்பேட்டை போலீஸார் பெண்கள் விடுதிக்கு சென்று விசாரணை செய்தபோதுஆபாசப்படங்களை கைப்பற்றினார்கள்.

இந்த வழக்கில், சந்திரமணி, சந்தோஷ், நஜால் மித்ரா, மற்றொரு சந்தோஷ் ஆகிய 4 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிடம் நீண்ட நேரம் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அனைவரும் சொந்தஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந் நிலையில் பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமிக்க அரவிந்தர்ஆசிரம நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+