மகாராஷ்டிரா: சோனியாவுடன் பவார் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மகாராஷ்டிராவில் அடுத்து ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிராவில் கடந்த 13ம் தேதி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 288 இடங்களில் ஆளும் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 139 இடங்களை பிடித்தது. 124 இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ்71 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 157 இடங்களில் போட்டியிட்டு, 69 இடங்களை வென்றது.

சிவசேனா- பாஜக கூட்டணி 117 இடங்களில் வெற்றி பெற்றது.

அதிக இடங்களைப் பிடித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பற்கான நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளது. அதிக இடங்களைப் பிடித்த தங்கள் கட்சிக்கே முதல்வர் பதவியை தர வேண்டும் என்று தேசியவாதகாங்கிரஸ் கோரி வருகிறது.

இது தொடர்பாக சோனியா காந்தியுடன் சரத்பவார் இன்று டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. விரைவில் இந்தப் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும்என்று சரத்பவார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா சட்டசபைக்கான காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் இன்று காங்கிரஸ்கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் பிரனாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் முன்னிலையில் மும்பையில்நடைபெறுகிறது.

கருணாநிதி வாழ்த்து:

இந் நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சோனியா காந்திக்கும், சரத் பவாருக்கும் திமுக தலைவர்கருணாநிதி தனித்தனியே வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+