தலித்துகளுக்கு தனியார் துறையில் முன்னுரிமை: ப.சி.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தலித் சமுதாயத்தினருக்கு தனியார் துறையிலும் முறையான இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கைஎடுக்கும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

திருக்குளம் சிந்தனையாளர்கள் மையம் சார்பில் தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதிட்டங்கள் குறித்த சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசினார்.

அப்போது, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான சலுகைகள், திட்டங்கள் குறித்து மிகத் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டும். இதில் அரசியல் நுழைந்து விடக் கூடாது. அப்படி நேர்ந்தால் தலித் மக்களின் முன்னேற்றத்தைஇலக்காகக் கொண்டதன் உண்மையான நோக்கம் அடிபட்டுப் போய் விடும்.

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு என்பது ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியின் பொது செயல் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கியமான திட்டம். இதுதொடர்பான தேசிய அளவிலான விவாதத்தை பிரதமர் மன்மோகன் சிங்தொடங்கியுள்ளார். இது வரவேற்கத்தக்கது.

தனியார் துறையிலும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க மத்திய அரசு உறுதியான முயற்சிகளை எடுக்கும்.பொதுத் துறையில் காலியாகக் கிடக்கும் தலித்துகளுக்கான பணியிடங்களை நிரப்ப முழு வீச்சில் நடவடிக்கைஎடுக்கப்படும்.

தலித்துகளுக்கு கல்விக்காக வழங்கப்படும் உதவித் தொகையை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.அதேசமயம் அவர்களுக்கு படிப்புக் கடனை அதிகக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தலித்துகளுக்கு அதிகஅளவில் கடனுதவி செய்ய வேண்டியது அவசியம்.

பிற சமுதாயத்தினரைப் போல தலித் சமுதாயத்தினரும் அதிக அளவில் கல்வி அறக்கட்டளைகளை, கல்லூரிகளைதொடங்க முயற்சிக்க வேண்டும். இதற்கு வங்கிகள் அதிக அளவில் கடன் கொடுக்கத் தயாராக உள்ளன. தலித்துகள்அதிக அளவில் கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+