3வது அணிக்கு வாய்ப்பில்லை: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலின்போது 3வது அணி அமைவதற்கான வாய்ப்பே இல்லை என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழகத்தில் புதிய அரசியல் சூழ்நிலை உருவாகி வருகிறது. எதிரும் புதிருமாக இருந்து வந்த பாமக நிறுவனர்ராமதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் கை கோர்த்து செயல்படத்தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும், மதிமுகவும் சேர்ந்து வருகிற சட்டசபைத் தேர்தலில் புதிய கூட்டணியைஉருவாக்கப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழகத்தில் 3வது அணி அமைவதற்கானவாய்ப்பே இல்லை. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகளில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாகநிறைவேற்றி வருகிறது.

சேது சமுத்திரம் திட்டத்தை மீனவர்களின் ஒட்டுமொத்த சம்மதத்தையும் பெற்ற பின்னரே நிறைவேற்ற வேண்டும்.இத்திட்டத்திற்கு காரைக்கால் பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மீனவர்கள்திருப்தி அடைந்த பின்னரே திட்டப் பணிகளை தொடங்க வேண்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+