For Daily Alerts
Just In
லாரி -மினி வேன் மோதலில் 5 பேர் பலி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே மினி வேன் மீது கண்டெய்னர் ஏற்றி வந்த லாரி மோதியதில் மினி வேனில் பயணம் செய்த 5பேரும் பரிதாபமாக இறந்தனர்.
காஞ்சிபுரம் அருகே சுங்குவார்ச்சத்திரம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர்என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலைக்கு வேலைக்கு 4 பேர் மினி வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனைகோபிநாத் என்பவர் ஓட்டிச் சென்றார்.
வேன் சுங்குவார்ச்சத்திரம் அருகே வந்தபோது எதிரே சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி வேன் மீதுபயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல நொறுங்கியது.
வேனில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இறந்த அனைவரும்சென்னை வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Comments
Story first published: Wednesday, October 20, 2004, 5:30 [IST]