கர்நாடக அதிரடிப்படைக்கும் வீடு, ரூ. 5 லட்சம்
பெங்களூர்:
தமிழக அதிரடிப்படையினரைப் போலவே கர்நாடக அதிரடிப்படை வீரர்களுக்கும் இலவச வீட்டு மனை, தலா ரூ. 5லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு படி பதவி உயர்வு வழங்கப்படும் என அம் மாநில முதல்வர் தரம்சிங்அறிவித்துள்ளார்.
வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ள தமிழக அதிரடிப்படையினருக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா விரும்பும் ஊரில் இலவச வீட்டு மனை, ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு படி பதவி உயர்வுஆகியவற்றை அறிவித்துள்ளார்.
இந் நிலையில் கர்நாடக வீரர்களுக்கும் இதே போன்ற பரிசை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.வீரப்பனை சுட்டுக் கொன்றது தமிழக அதிரடிப்படை தான் என்றாலும், அதில் கர்நாடகமும் முழு உரிமை கோரநினைக்கிறது.
இதன் ஒரு பகுதியாகவே கர்நாடக அதிரடிப் படையினருக்கும் பரிசுகளை அறிவித்துள்ளார் முதல்வர் தரம்சிங்.
அவர் கூறுகையில், கர்நாடக அதிரடிப் படைக்கு ரூ. 50 கோடி மதிப்பில் பரிசுகளை வழங்க தீர்மானித்துள்ளோம்.ஒவ்வொரு வீரருக்கும் இலவச வீட்டு மனை, ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு படி பதவி உயர்வு அளிக்கப்படும்.
அதிரடிப் படையை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். நக்சலைட்களைஒழிக்கும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்றார்.
பிரதமருக்கு தரம்சிங் கடிதம்:
முன்னதாக வீரப்பனும், அவன் கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதை விளக்கி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு கர்நாடக முதல்வர் தரம்சிங் கடிதங்கள் அனுப்பியுள்ளார்.
அக் கடிதத்தில்,
தமிழக, கர்நாடக அதிரடிப் படையினர் அடிக்கடி சந்தித்துப் பேசி, ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் வீரப்பனை வீழ்த்த முடிந்தது. இந்த ஒருங்கிணைந்தநடவடிக்கையால் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் தப்ப முடியாதபடி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சம்பவம் நடந்த தினத்தன்று கிடைத்த நம்பிக்கைக்குரிய தகவலின் அடிப்படையில் வீரப்பன் வரும் வழியில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.அதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரப்பனும் அவனது கும்பலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வீரப்பனையும், அவன் கூட்டாளிகளையும் அழைத்து வந்த ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் தப்பி விட்டார். (இந்த வேனை ஓட்டி வந்ததே தமிழக அதிரடிப்படை வீரர்என விஜய்குமார் கூறும் நிலையில் தரம்சிங் இவ்வாறு கூறுவது முக்கியத்துவம் பெறுகிறது)
கடந்த 15ம் தேதியே பத்திரிகையாளர்களுக்கு நான் பேட்டியளிக்கும் போது, வீரப்பன் கும்பலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைகோடிட்டு காட்டியிருந்தேன்.
இவ்வாறு தரம்சிங் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார். வீரப்பனை கொன்றது தமிழக அதிரடிப்படையாக இருந்தாலும் கர்நாடகத்துக்கும் அதில் முழு பங்குஇருப்பதாகக் காட்ட கடும் முயற்சி எடுத்து வருகிறது அந்த மாநில அரசு.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications