கருணாநிதி வீட்டை முற்றுகையிடும் மீனவர்கள்
சென்னை:
சேது சமுத்திர திட்டத்தை சிங்களர்கள் தூண்டுதலால் எதிர்க்கிறார்கள் என்று பேசிய திமுக தலைவர் கருணாநிதியின்பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 27ம் தேதி அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தமீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இ.ராஜா, பாரதி, கோசு.மணி ஆகியோர்நிருபர்களிடம் கூறியதாவது:
சேது சமுத்திர திட்டத்தை எதிர்ப்பவர்களை சமூக விரோதிகள் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு விமர்சித்தார்.கருணாநிதி சிங்களர்கள் தூண்டுதலினால் தான் சேது திட்டத்தை இங்கே எதிர்க்கின்றனர் என்று கூறினார்.
இத் திட்டம் மீனவர் வாழ்வை பாதிக்கும் என்பதை நாங்கள் ஆதாரத்துடன் கூறுகிறோம். எனவே அதை சிங்களர்தூண்டுதல் என்று கருணாநிதி பேசியது கண்டிக்கத்தக்கது. மாற்றுக் கருத்துக்களை தாங்கிக் கொள்ள முடியாமல்கருணாநிதி இப்ப இழிவாகப் பேசியது முறையல்ல.
அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் வரும் 27ம் தேதி கருணாநிதி வீட்டு முன்பு அகில இந்திய மீனவர் சங்கம்,தமிழ்நாடு மீனவர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய மீனவர் சங்கம், மீனவர் நல மாமன்றம், பாரதிய மீனவர்சங்கம், தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய சங்கங்கள் இணைந்து முற்றுகைபோராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications