ஆளுநரை காப்பாற்ற அதிமுக முயற்சி
சென்னை:
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு அதிமுக தந்தி மூலம் கோரிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அதிமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள தந்தியில், திமுக தலைவர்கருணாநிதியை திருப்திப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது.
இந்த முயற்சி அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநர் மாற்றம் தொடர்பான வழக்கு தற்போதுஉச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந் நிலையில் ஆளுநரை மாற்றும் மத்திய அரசின் முயற்சியைத் தடுக்கவேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.
இதேபோல, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பியுள்ள மற்றொரு தந்தியில், ஆளுநரை மாற்ற எதிர்ப்புதெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, தமிழக ஆளுநரைமாற்றும் மத்திய அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம்பரிந்துரை செய்யவேண்டும்.
இந்த தந்தியையே ரிட் மனுவாக உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.