For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாகுமா?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என மதுரையைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் தமிழக சட்ட அமைச்சர் ஜெயக்குமாரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான குழு அமைச்சர்ஜெயக்குமாரை சந்தித்து கொடுத்த மனுவில்,

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். பல்வேறுமாநிலங்களில், அந்தந்த மாநில ஆட்சி மொழியே, உயர் நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக உள்ளது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தமிழில் பெயர்ப் பலகை அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X