மருதுபாண்டியர் தபால் தலை: நான் தான் காரணம்- திரு
சென்னை:
மருது பாண்டியர் தபால் தலை வெளியிடப்பட்டதற்கு நான்தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நேற்று மருதுபாண்டியர் தபால் தலையை சென்னையில் வெளியிட்ட தயாநிதி மாறன் தன்னால்தான் இதுவெளியிடப்பட்டது என்று கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த விழாவில் சபாநாயகர் காளிமுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர்முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியதால்தான் தபால்தலை வெளியிடப்பட்டது என்று பேசியுள்ளனர்.
உண்மையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நான் தபால் துறை அமைச்சராக பதவி வகித்தபோதுஎன்னால்தான் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 2004ம் ஆண்டில் என் தலைமையில் நடந்த கமிட்டிகூட்டத்தில் திருப்பூர் குமரன், பத்திரிக்கையாளர் வாசன், மருது சகோதரர்கள், மான்போர்ட் சகோதர்கள் உள்படதமிழகத்தைதச் சேர்ந்த 7 பேருக்கு தபால் தலை வெளியிடுவது என முடிவு செய்து அதற்கான அரசாணையை நான்வெளியிட்டேன்.
போனஸ் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட சங்கங்களை அழைத்துப் பேசவேண்டும். அதேபோல் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பன் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சி தருகிறது. வருகிற 30ம் தேதி பசும்பொன்னில்நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் முன்னால் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பாஜக முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் மதுரையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர்சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
மத்திய பணியாளர் தேர்வில் தமிழில் எழுதுவது நிறுத்தப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம்கூறியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியிருக்கிறார்.
வாஜ்பாயை எந்த அளவுக்கு வைகோ புகழ்ந்தார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் அவர் கோரிக்கைநியாயமானதுதான் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications