வீரப்பன்: புத்தகம் எழுதும் விஜயக்குமார்
சென்னை:
வீரப்பன் தொடர்பான தனது ஆபரேசன், எண்ண அலைகளை புத்தகமாக எழுதப் போவதாக அதிரடிப்படையின்தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார்.
விஜயக்குமார் கூறுகையில், வீரப்பனின் நெற்றியில் இருக்கும் குண்டு பாய்ந்த அடையாளம், அருகிலிருந்துசுட்டதால் ஏற்பட்டது என்றும், அதனால் அவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறுவது தவறு.
அதிரடிப்படையினர் பதுங்கி இருந்த வாகனம், வீரப்பன் வந்த வேனுக்கு மிக அருகில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்தது. அவனை அருகில் இருந்துதான் சுட்டோம். நிச்சயம் அவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இதைநான் உறுதியாக கூற முடியும்.
எந்த ஒரு சந்தேகமும் வெளிவராதபடி மிக ரகசியமாக அவனுடைய வட்டத்துக்குள் எங்கள் வீரர்கள்ஊடுருவியதுதான் வீரப்பனுக்கு துரதிர்ஷ்டமாக அமைந்தது.
பட்டுப்புழு தன்னைச் சுற்றி கட்டும் கூட்டை உரிய காலத்துக்கு பிறகு புழுவைக் கொன்று பட்டு நூலுக்காகபயன்படுத்திக் கொள்வார்கள். அதுபோலவே வீரப்பனை மெதுவாக சுற்றி வளைத்து சரியான காலத்தில் வெளியேஇழுத்து தீர்த்துக் கட்டுவதற்காகவே ஆபரேஷன் குக்கூன் என்று இந்த நடவடிக்கைக்கு பெயர் வைத்தோம்.
துப்பாக்கிச்சண்டை முடிந்ததும், வீரப்பன் இறந்து விட்டானா என்பதை உறுதி செய்த பின்புதான் நிம்மதிஅடைந்தேன்.
இந்த மரணத்தைத் தேடிக் கொண்டது வீரப்பன் தான். அவன் எங்களிடம் சரண் அடைந்து இருக்கலாம். முதலில்கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த நினைத்தோம். ஆனால், அங்கிருந்து துப்பாக்கி குண்டுகள் முழங்கின.ஏற்கனவே பல பேரை இழந்த நாங்கள், மேலும் உயிர்ப்பலி கொடுக்க தயாராக இல்லை. அதனால்தான்சுட்டுக்கொல்வது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.
ஆரம்ப காலங்களில் வீரப்பனுக்கு சில அரசியல்வாதிகளுடன் அவனுக்கு தொடர்பு இருந்து இருக்கலாம்.பிற்காலத்தில் அவனுக்கு அரசியல் தொடர்பு எதுவும் இல்லை.
தந்தையின் சாவுக்கு பழி வாங்குவேன் என்று வீரப்பன் மகள் சபதம் ஏற்றதாக கூறப்படுகிறது. அவளுடையஉணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தந்தையை இழந்த துயரத்தில் இருக்கிறாள். அவள் ஒருகுழந்தைதானே.
அடுத்து ஒரு ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தற்போது 90 நாட்கள் விரதம் தொடங்கி இருக்கிறேன்.சபரிமலை கோயிலுக்கும், மூகாம்பிகை கோயிலுக்கும் செல்லவிருக்கிறேன்.
பின்னர் எனது எண்ண அலைகளை ஒரு புத்தகமாக வெளியிடுவேன் என்று விஜயகுமார் கூறினார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!











Click it and Unblock the Notifications