ஜெனரேட்டர் புகையால் பலியான கணவன், மனைவி!

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் அருகே புவனகிரியில் ஜெனரேட்டரிலிருந்து வந்த புகையில் மூச்சுத் திணறி தூக்கத்திலேயே கணவனும்,மனைவியும் பரிதாபமாக இறந்தார்கள்.

பழனிச்சாமி- விஜய்லட்சுமி தம்பதி தங்கள் மகன் விஜய், மகள் வினோதினியுடன் நேற்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டது. பேன் இல்லாமல் தூங்க முடியாத அளவுக்கு புழுக்கம் நிலவவே,அருகில் உள்ள தனது துணிக் கடையில் இருந்து ஜெனரேட்டரை எடுத்து வந்தார் பழனிச்சாமி.

வீட்டுக்குள் வைத்து ஜெனரேட்டரை இயக்கினார் பழனிச்சாமி. கதவுகளும் ஜன்னல்களை மூடப்பட்ட நிலையில்ஜெனரேட்டலிருந்து கிளம்பிய புகை வெளியே செல்ல முடியாமல் அறைக்குள்ளேயே சுற்றி வந்தது.

இதனால், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான்கு பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் பழனிச்சாமியும்,பத்மாவதியும் பரிதாபமாக இறந்துள்ளனர். காலையில் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் இருந்தோர்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போதுதான் இந்த பரிதாப சாவு குறித்துத் தெரியவந்தது.

நச்சுக் காற்றை சுவாசித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விஜய்யும், வினோதினியும் பாண்டிச்சேரி ஜிப்மர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+