கச்சத்தீவை குத்தகைக்கு எடுக்க ஜெ. யோசனை!
சென்னை:
கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளை இந்தியா நீண்ட கால குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கச்சத் தீவு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கைகடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றுப் பகுதி தீவுகளை நீண்ட கால குத்தகைக்கு எடுக்க வேண்டும்.இதன் மூலம் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்கலாம்.
கச்சத் தீவைச் சுற்றிலும் 5 கி.மீ. தொலைவுக்கு தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொள்ள அனுமதிக்கப்படவேண்டும் என்று கடந்த 3 ஆண்டுகளாக நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இலங்கை சிறையில் வாடி வரும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க என்னால் முடிந்தஅனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அவர்.
மீனவர்களுக்கு சலுகை:
இதற்கிடையே, மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கான விற்பனை வரியை ரத்து செய்வதாக ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
இதனால், தற்போது மீனவர்களுக்கு லிட்டருக்கு ரூ. 26.93க்கு வழங்கப்படும் டீசல், இனிமேல் ரூ. 21.60க்குவழங்கப்படும்.
இந்த விலை குறைப்பு மூலம் மாநிலம் முழுவதும் இயந்திரப் படகுகளை பயன்படுத்தும் 5,000 மீனவர்களும்,நாட்டுப் படகுகளைப் பயன்படுத்தும் 15,200 மீனவர்களும் பயனடைவர் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கடந்த இரு வாரங்களாக மீனவர்கள் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications