கம்யூனிஸ்ட்டுகளை விரட்டியடிக்க வேண்டும்: சு.சுவாமி
சென்னை:
பல நாடுகளை பொருளாதாரரீதியில் திவாலாக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளை இந்தியாவை விட்டே விரட்டவேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சமீபகாலமாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சுடன் அதிக நெருக்க காட்ட ஆரம்பித்திருக்கிறார் சுவாமி. சோனியாகாந்தியை அரசியல்ரீதியில் ஒழித்துக் கட்ட இந்தக் கட்சிகளுடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாகக் கூறிவருகிறார்.
இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கம்யூனிஸ்ட்டுகளை இந்திய அரசியலில் இருந்து வேரறுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன்கூறியிருப்பதை வரவேற்கிறேன். இந்த கம்யூனிஸ்டுகளால் பல நாடுகள் திவாலாகி இருக்கின்றன. கிழக்குஐரோப்பா இதற்கு நல்ல உதாரணமாகத் திகழ்ந்து கொண்டுள்ளது.
தொழிலாளர் நலனுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் நாடுகளில்அடக்குமுறை தான் நிலவுகிறது. அங்கு தொழிலாளர்களுடன் அரசுகள் பேச்சு நடத்துவது கூட இல்லை.
மார்க்ஸிசத்துக்கு எதிராக தேசிய அளவில் ஆர்.எஸ்.எஸ். தர்ம யுத்தம் நடத்த முன் வர வேண்டும். இந்த தேசியப்பணிக்கு உதவிட ஜனதா கட்சி முழு மனதுடன் முன் வரும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications