சரோஜினி வரதப்பனுக்கு ஜானகிதேவி பஜாஜ் விருது
மும்பை:
காந்தியவாதியான ராதாகிருஷ்ண பஜாஜ், டென்மார்க்கைச் சேர்ந்த மேரி தொய்கர் ஆகியோர் இந்த ஆண்டுக்கானஜம்னாலால் அமைதி விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த சரோஜினிவரதப்பனுக்கு ஜானகி தேவி பஜாஜ் வழங்கப்படவுள்ளது.
சமூக வளர்ச்சிப் பணிகள், காந்திய சிந்தனைகளைப் பரப்புதல் ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்குஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஊரக வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பத்தை அமல்படுத்தியதற்காக பிரபாகர் தாகூருக்கு ஜம்னாலால்அறிவியல் விருது வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு விருதுடனும் கேடயமும், ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்படும்.
இந்த விருதுகளை வரும் டிசம்பர் 9ம் தேதி மும்பையில் நடக்கும் நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திரசரஸ்வதி சுவாமிகள் வழங்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications