விஜயக்குமார் யாத்திரைக்கு நல்லகண்ணு எதிர்ப்பு
ஈரோடு:
பண்ணாரியிலிருந்து, சென்னை வரை தமிழக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார்பாதயாத்திரை மேற்கொள்வது தேவையற்றது, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றுஇந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சந்தன மரங்களை வெட்டி வீழ்த்திய,யானைகளைக் கொன்று தந்தம் திருடிய வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டது சந்தோஷமான செய்திதான்.இது ஒரு குற்றவாளியின் முடிவு.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் பண்ணாரிகோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுள்ளார். இது அவரது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால், பண்ணாரி கோவிலிலிருந்து சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் வரை பாதயாத்திரை மேற்கொள்வது என்பது தேவையற்றது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவேகருதப்படும் என்றார் அவர்.
விஜய்குமாரின் பாத யாத்திரையை அதிமுக தனக்கு ஆதரவாக திருப்பிக் கொள்ளும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.