Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனத்துறையினருக்கும் பரிசு, பதவி உயர்வு: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் கும்பலைப் பிடிக்க தமிழக அதிரடிப்படையினருக்கு உதவியாக இருந்த வனத்துறையினருக்கும் பதவிஉயர்வு, ரொக்கப் பரிசு, பதக்கங்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

42 வன அலுவலர்களுக்கு பதவி உயர்வும், தலா ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்றும் 105 தினக்கூலி வனத்தோட்டக் காவலர்களின் பணி நிரந்தரமாக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வீரப்பனையும், அவனது கும்பலையும் சுட்டு வீழ்த்திய தமிழக அதிரடிப் படையினர் 752 பேருக்கும் வீட்டு மனை,ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதவி உயர்வை ஜெயலலிதா அறிவித்தார்.

வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில் இவை வழங்கப்படவுள்ளன.

இந் நிலையில் வனத்துறையினரை ஜெயலலிதா புறக்கணித்து விட்டதாக பேச்சு கிளம்பியது. வீரப்பனைப் பிடிக்கும்அதிரடிப்படையினர் முயற்சிக்கு வனத்துறையினர் பெருமளவில் உதவியும் கூட, தங்களை அரசுபுறக்கணித்துவிட்டதாக அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் வனத்துறையினருக்கும் பரிசுகள், பதவி உயர்வு, பதக்கங்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பதக்கங்கள்:

இதன்படி வீரப்பன் வேட்டையில் சிக்கி உயிழந்த வனத்துறையினருக்கு வீர தீர பதக்கம் வழங்கப்படும்.காயமடைந்த வனத்துறையினருக்கு வீர தீர விழுப்புண் பதக்கம் வழங்கப்படும். இந்தப் பதக்கம் தங்க முலாம்பூசப்பட்ட வெள்ளிப் பதக்கமாகும்.

சிறப்பு அதிரடிப்படையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி உயிழந்த மற்றும் காயமடைந்த வீரர்களுக்கும்இந்த பதக்கங்கள் வழங்கப்படும்.

பதவியுயர்வு, பரிசு:

இதுதவிர வனத்துறையினரின் சேவையைப் பாராட்டும் விதமாக 42 வன அலுவலர்களுக்கு ஒரு படி பதவி உயர்வு,தலா ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

105 தினக்கூலி தோட்டக் காவலர்களின் பணி முறைப்படுத்தப்பட்டு அவர்கள் வனத்துறை தோட்டக் காவலர்களாகபதவி உயர்த்தப்படுவர். தொகுப்பூதிய அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

அதிரடிப்படைக்கு நினைவிடம்:

மேலும், வனத்துறை மற்றும் அதிரடிப்படை வீரர்களின் தீரச் செயலை எதிர்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும்வகையில் நினைவிடம் அமைக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். காவலர் பயிற்சிக் கழக வளாகத்தில் இந்தநினைவிடம் நிறுவப்படவுள்ளது.

மக்களுக்கும் நிவாரணம்:

வீரப்பன் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கும் அவர்களது பாதிப்புக்கேற்றபடி உரியநிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+