புதுவை சட்டசபையில் உரையாற்றும் கலாம்
பாண்டிச்சேரி:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நவம்பர் 1ம் தேதி பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவில் கலந்து கொண்டு பட்டமளிப்பு சிறைப்புரையாற்றுகிறார், பின்னர் சட்டசபையிலும் சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக புதுவை அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 1ம் தேதி நடக்கிறது.
இதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரை நிகழ்த்தி பட்டங்களைவழங்குகிறார். புதுவை துணை நிலை ஆளுநர் லக்கேரா, முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் லட்சுமி நாராயணன்ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
நிகழ்ச்சியில், 6,460 மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் அளிக்கப்படும். பின்னர் மாணவர்களுடன் அப்துல் கலாம்கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்ச்சிக்குப் பின் புதுவை சட்டசபையில் கலாம் உரை நிகழ்த்துகிறார்.
புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலை 5.30 மணியளவில் சென்னை வரும் கலாம், முக்கியப்பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
ஆந்திர மாநில சட்டசபையில் உரை நிகழ்த்திய கலாம் தற்போது புதுவை சட்டசபையில் உரை நிகழ்த்தவுள்ளார்.அவரை தமிழக சட்டசபையிலும் உரையாற்ற அரசு அழைத்துள்ளது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications