கொள்ளை: மதுரை முத்து மகனுக்கு 10 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் இந்தியன் வங்கியில் கடந்த 1988ம் ஆண்டு நடந்த துணிகர நகைக் கொள்ளையில் குற்றம் சாட்டப்பட்டமதுரை முன்னாள் மேயர் முத்துவின் மகன் உள்ளிட்ட 7 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மதுரை அண்ணா நகரில் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இங்கு கடந்த 1988ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஒருகும்பல் உள்ளே புகுந்து ஏராளமான நகைகளை திருடிச் சென்றது.

தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த திருட்டுச் சம்பவத்தின்போது 2,500 பவுன் தங்கை நகைகள்,ரொக்கம் உள்பட ரூ. 1 கோடி மதிப்புக்கு திருட்டுப் போனது.

இந்த துணிகர கொள்ளை தொடர்பாக முன்னாள் மேயர் முத்துவின் மகன் நல்லதம்பி, நித்தியானந்தம், அஜந்த்,வின்சென்ட் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் நல்லதம்பி உள்ளிட்ட 15 பேர் கைதுசெய்யப்பட்டனர். குமரேசன் என்பவர் இறந்து விட்டார்.

கைது செய்யப்பட்ட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மதுரைமுதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி உதயன், இந்த வழக்கில் நல்லதம்பி, குருமூர்த்தி, விஜயக்குமார், பிண்டோ,அஜந்த், துரைசிங்கவேல், பழனி ஆகிய 7 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மீதி8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+