வாக்கு எந்திரங்களில் தவறு செய்ய முடியாது: சேஷன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் யாரும் முறைகேடு செய்துவிட முடியாது என முன்னாள் தலைமைத் தேர்தல்ஆணையர் டி.என்.சேஷன் கூறினார்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதால் தான் மக்களவைத் தேர்தலில் அதிமுகதோற்றது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்டபோது,
எனக்குத் தெரிந்தவரை இந்த எந்திரங்களில் யாரும் தவறு செய்துவிட முடியாது, எப்படி முறைகேடு செய்வது என்றுஉங்களில் யாருக்காவது தெரிந்தால் எனக்கு விளக்கம் தரலாம்.
அதே நேரத்தில் இந்த எந்திரங்கள் இருந்தாலும் கள்ள ஓட்டு போடுவது சாத்தியம் தான். இந்த எந்திரஙகளால்காகிதம், நேரம் எல்லாம் மிச்சமாகிறது என்ற சேஷன், தேர்தல் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.ஊழல் பேர்வழிகள் அமைச்சர்களாவதைத் தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications