ஜெ.வை அவதூறாக பேசியதாக வைகோ மீது வழக்கு
காஞ்சிபுரம்:
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாளை ஆஜராக வேண்டும் என்றுசெங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை ஆதரித்துகடந்த மார்ச் மாதம் 23ம் தேதி திருவள்ளூர் அறிஞர் அண்ணா திடலில் நடந்த கூட்டத்தில் வைகோவும், மதிமுகதலைமைப் பேச்சாளர் மணிவேந்தனும் பேசினார்கள்.
அக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகக் கூறி இருவர் மீதும் திருவள்ளூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஜெயலலிதாவின் சார்பில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஆறுமுகம்வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் நாளை வைகோ, மணிவேந்தன் இருவரும் ஆஜராக அவர்களுக்கு சம்மன் அனுப்பமாறு நீதிபதிஅக்பர் அலி உத்தரவிட்டார்.
வைகோ பேட்டி:
இதுகுறித்து வைகோ கருத்து தெரிவிக்கையில், இதைக் கண்டு நான் அஞ்சவில்லை. சட்டப்படி சந்திப்பேன்.நீதிமன்ற சம்மன் வந்துள்ளது, அதைப் பெற்றுக் கொண்டேன். நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில்ஆஜராகவுள்ளேன்.
எனது பேச்சுரிமையைத் தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதை நாங்கள் சட்டரீதியாகமுறியடிப்போம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications